அவனெனும் போதே ஒட்டிக் கொள்ளும் நாணம்,
அவனை எண்ணும் போது அவளை மீறிப் போகும்..
கனவினில் தினம் சந்திக்கும் அவனை, விழிகாண ஏக்கங்கொண்டு கனவுகள் தேய, குரல் கம்ம, உடல் இளைக்க அழுது தவிப்பாள்..
பிறையென்று தேய்ந்த பின்னும், பிறிதொருநாள் முழு நிலவாய் மின்னும் நிலவைப் போல, அவன் நினைவொன்றில் மூழ்கத் தொடங்குகையிலே பிரகாசிக்கிறாள்,
நிஜமற்று வாழும் காதற் பேழையானவள்..
#கனவுக்காதலன் #காதல்காரி
😍
ReplyDelete