Wednesday 31 July 2019

பூனாச்சி எனும் வெள்ளாட்டின் கதை

பூனாச்சி எனும் வெள்ளாட்டின் கதை

- பெருமாள் முருகன்



காட்டில் இருந்த கிழவனுக்கு வரம் போல் வந்து வாய்த்தவள் அந்த வெள்ளாட்டுக் குட்டி. உருவம் பொருட்டு, கிழவி அவளை பூனாச்சி என்று செல்லமாய் அழைக்கிறாள். 7 குட்டி ஈனும் அதிசய வகை என்று பகாசுரன் போல் ஒருவன் கொடுத்துச் சென்றது என்று கிழவன் கூறியதை, அது முதன் முறை குட்டி ஈனும் வரை கிழவி நம்பவே இல்லை.

கதை முழுக்க வருத்தத்திற்கு அழும், சந்தோஷத்திற்கு சிரிக்கும் சாதாரண மனிதர்களும், பூனாச்சியும் மட்டுமே.

பூனாச்சி தன் வாழ்வில் 3 முறை சினையாகிறாள். 2வது முறை மட்டுமே தனக்கு விருப்பமான பூவனுடன் சேர்கிறாள். அவனுடன் மட்டுமே வலியின்றி கூடுகிறாள். அவனுடன் மட்டுமே இன்பமாய் உணர்கிறாள். அவனை உரசியவாறு உக்காந்திருப்பதே அவளுக்கு பெரிய ஆனந்தமாய் இருக்கிறது. அவன் குட்டிகளை சுமப்பதைப் பற்றி பேரானந்தமாய் உணர்கிறாள்.

ஆனால் அன்று இரவே பூவன் பலிகொடுக்கப்பட, இறந்து போகும் அளவிற்கு சோர்ந்து போகும் அவள், தன்னுள் இருக்கும் அவன் உயிரைச் சுமப்பதற்காகவே, கிடைத்ததை எல்லாம் தின்று வாழ்கிறாள். பின்பு குட்டிகளின் முகத்தில் பூவனைப் பாத்து அவனையும் அவன் ஸ்ப்ரிசத்தையும் நினைத்துக்கொண்டே இருக்கிறாள்.

பூனாச்சியின் வாழ்க்கையைப் படித்து முடிக்கும் போது ஏதோ ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் படித்து முடித்த உணர்வு நமக்குள் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.

பூவனின் குட்டிகளுக்குப் பிறகு, தேவைபொருட்டு மூன்றாம் முறை இன்னொரு ஆட்டினைக் கூடும் போதும், பூனாச்சி பூவனையே நினைத்து கொள்கிறாள்.

கடும் வறட்சியில் ஊர் தவித்துக் கொண்டிருக்க, உணவு கிடைக்காமல் வயிற்றில் குட்டிகளுடனே பூனாச்சி இறந்து போகிறாள். சாகும் தருணத்திலும் பூவனையே நினைத்துக் கொள்கிறாள். சட்டென வரும் இந்த முடிவில் மனசு பாரமாகி விடுகிறது . ஆனால் அதன் பின்னான அவள் நினைவுகளும், காதலும் நம்மை அழ வைக்கும்.

அப்படி சாகும்போது நினைத்துக்கொள்ளும் அளவு ஓர் உயிரை நேசித்து வைத்துக்கொள்ள, இந்த வாழ்வில் நமக்கு எத்தனை பெரிய வெளி இருக்கிறது. அப்படி ஓர் உயிரை நமக்காக தேடாத இந்த வாழ்வை வாழ்ந்தென்ன பயன்?

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb&#...