Saturday 22 June 2019

Kayamkulam Kochunni



மலையாள படம், கொஞ்சம் தானாவே புரியறதும், கொஞ்சம் சப்டைட்டில் உதவியுமாக பாத்தாச்சு.. பசிக்கு திருடும் ஒருவரின் மகனாகப் பிறந்து, அம்மாவால் "வெளிய போயி பொழச்சுக்கடா கண்ணு" என்று அனுப்பி வைக்கப்படுகிறார். ஒரு நல்லவரின் இடத்தில் சேர்ந்து, கடை ஒன்றில் வேலை செய்யத் துவங்குகிறார். திருடக் கூடாது, பொய் சொல்லக் கூடாது என்று கொள்கையுடன் வளர்கிறார். பசட்டென துளிர்விடும் காதல், காதலி உதவியினால் முன்பு நிராகரிக்கப்பட்ட களரி பயிற்சி கிட்டுகிறது. குரு இவனையே தன் கலை மகன் எனக் கூறுகையில், பல வருடமாக கலையை காதலித்த வருங்கால போலிஸ்காரன் கோபித்துக் கொண்டு மூட்டை கட்டிக் கிளம்புகிறான்.
பின்பொருநாள், ஆங்கிலேயர்களுக்கு தெரியாமல், தங்கத்தை எடுக்க முயற்சிக்கும் ஐயர் கூட்டத்தால், கடலுக்குள் இருந்து தங்கத்தை எடுத்துவர அனுப்பி வைக்கப்படுகிறார். அவர்களே 5 பொன் பரிசளித்துவிட்டு திருடன் பட்டமும் கட்டிவிட்டு, அவர் காதலி தாழ்ந்த சாதி என்பதால் அவளையும் கல்லால் அடித்து விரட்டுகிறார்கள். தண்டனையாக இவனை தலைகீழாய் தொங்க விட்டுவிட, இட்டிகரை பக்கி என்ற பெரிய திருடன் (மோகன்லால்) வந்து காப்பாற்றி, இவனை அந்த இடத்திற்க்கே ஒரு அதிபதி போல நிலைநாட்டி விட்டு அவ்விடத்தை விட்டு பிரிகிறார்.
இவன் காதலி என்பதால் பல இடங்களிலும் துன்பப்பட்டவள், காவலர்களிடம் இவனை காட்டிக் கொடுத்துவிடுகிறாள். அங்கு தப்பியபின், இவன் கூட்டாளிகள் காவல்காரரால் வஞ்சிக்கப்பட்டு, காட்டிக்கொடுக்கப்படுகிறான். தூக்கிடலப்படும் தருணம் தன் குருவால் காக்கப்படுகிறான்.
அந்த காலத்தில் இருந்த பிரிவினை, அடக்குமுறை எல்லாம் தெளிவாக படம் பிடித்திருக்கிறார்கள். இப்போது நாம் கொண்டாடும் சுதந்திரம், அதை எப்படியெல்லாம் வாங்கியிருக்க முடியும் என்பதெல்லாம் அவ்வப்போது கண்முன் நிழலாடுகிறது.
இது ஆங்கிலேயர் காலத்தில் வாழ்ந்த, காயங்குளம் கொச்சுன்னி எனும் நிஜமான ஒருவரின் கதை. இருப்பவரிடம் எடுத்து, இல்லாதவரிடம் கொடுக்கும் கொள்கையுடன் வாழ்ந்தவர். இவர் இறப்பு ஒரு மர்மமாகவே இருக்கிறது.

No comments:

Post a Comment

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb&#...