எப்பவும் ஒரே விஷயத்துல மூழ்கி முத்தெடுப்பது எனக்கு சின்ன வயசுல இருந்தே வரல.. அதனாலயே multi tasking எனக்கு பிடித்தமான & நல்லா வரக்கூடிய விஷயமும் கூட.. இந்த parallel readingம் அப்படிதான் பாக்கறேன்..
ஒரு சமயத்தில் 2-3 புத்தகங்கள் வாசிப்பது நிறைய வசதிகள் கொண்டது. புத்தகம் சுமக்க முடியாத நேரத்தில் போனில் உள்ள புத்தங்களையும், வீட்டில் வேறு புத்தகமும் படிக்கலாம்.. மனநிலைக்கு ஏற்றாற்போலும்.. ❤
ஒரு சமயம் ஒரு புத்தகத்தில் நமக்கு ஏதோவொரு காரணமாக தொய்வு ஏற்பட்டாலும், பெரிய இடைவெளி எதுவும் இல்லாமல் சட்டென்று mood recover பண்ணிக்கலாம்.. அதே சமயம் நிறையவும் படிக்கலாம்.
சில சமயம் அந்த புத்தங்களுக்கிடையில் நாமே ஒரு பின்னல் ஏற்படுத்திக்கொண்டு புது சிந்தனைகள், ஐடியாக்களை கூட உருவாக்குவோம்.. நல்லாயிருக்கும் 😍
No comments:
Post a Comment