உன் அரைத்தூக்க காதல் மொழிகளை
கேட்கவே, உறங்கிவிட்டாய் என தெரிந்த பிறகு அழைக்க வேண்டும்...
"இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன் மா" என்ற கொஞ்சல் மொழிகளை கேட்க, அரைமணிநேரம் முன்னதாகவே எழுப்பி விட வேண்டும்..
சின்ன சின்னதாய் தவறுகள் செய்து, உன் கோப மொழிகள் கேட்டிட வேண்டும்..
சமைக்கையில் கொஞ்சம் அதிகமாய் காரம் சேர்த்திட வேண்டும்..
திட்டினாலும் சரி என்று உன்னையும் சேர்த்து மழையில் இழுத்து விட வேண்டும்...
சாகும் வரை நம் காதல் டைரியில் இப்படி சில குறிப்புகளை அனுதினமும் சேர்த்திட வேண்டும்..
No comments:
Post a Comment