Wednesday, 17 June 2020

Kindle case crochet பின்னியாச்சு

எப்பவும் ஏதாவது ஒரு விஷயத்த எடுத்து, இத முயற்சி பண்ணி பாரேன்னு சொல்லறது எங்க மனோவுக்கு கைவந்த கலை. எந்த விஷயமா இருந்தாலும் முயற்சி பண்ணி பாத்துடறது தான் நமக்கு ரொம்ப பிடிச்ச விஷயமாச்சே. அப்படி தான் இந்த  kindleக்கு கவர் ரெடி பண்ணது.

தினமும் கிண்டிலில் புத்தகம் வாசிப்பேன். ஆனா அதோட கவர் முழுசா உள்ள போட்டு வைக்கற மாடல்ல இருக்கறதால, கிண்டில அப்படியே வெளிய வச்சுடுவேன்.


இதுக்கு க்ரோஷோ கவர் ட்ரை பண்ணுனு மனோ சொல்ல, சரினு மாடல் தேடி கூகிள் போனேன். எந்த appலயும் இந்த case மாடல் கிடைக்கல. Fullஆ கவர் பண்ற மாதிரி crochet மாடல் மட்டும் தான் கிடைச்சது. ஆனா அது மாதிரி ஏற்கனவே பவர் பேங்க்குக்கு பின்னியிருந்தேன். 



இதுவரைக்கும் பின்னுனதே 4 க்ரோஷே தான். Tea coaster, அத கல்யாணத்து முன்ன மனோவுக்கு கிப்ட் பண்ணினேன், குட்டி பாப்பா ட்ரெஸ் ஒண்ணு, அத மனோ தங்கை பாப்பாக்கு ஆசயா அனுப்பினேன். ஆனா shoulder அளவு சரியா வரல. இன்னொன்னு பவர் பேங்க்குக்கு பின்னுனது. நாங்க பயன்படுத்திட்டு இருக்கோம். அப்பறம் சின்னதா ஒரு ஹார்ட்டு. அதாவது 3க்கு அப்புறம் இது ஒரு சின்ன +1. மனோ பிறந்த நாளுக்கு பின்னி அனுப்பியிருந்தேன்.




இதான் சேதிங்கறதால, மாடல் இல்லாத பின்னவும் தெரியாது. மாடலும் கிடைக்கல. ஏதோ ஒண்ணு சர்தான்னு பின்ன ஆரம்பிச்சாச்சு. ஆரம்பம் எடக்குமடக்கா பின்ன தொடங்கி, போகபோக ஐடியா கிடைச்சு, finishing நல்லா வந்தது. கிட்டதட்ட 1.5 மணி நேரம் ஆச்சு.




அது சரி, neatஆ பின்ன ஐடியா கிடைச்சதால, இப்ப பின்னுனது சுமாரா வேற தோணுது 😷 திரும்பவும் மொதல்ல இருந்து இன்னொன்னு பின்ன கிளம்பிட்டேன். 👻

பி.கு: இதுக்கு பயன்படுத்துன க்ரோஷோ needle அளவு 10




Sunday, 12 April 2020

கன்னித்தீவு - ஓர் ஆதித் தெறிப்பு!





ரைட்டர் Saravanakarthikeyan Chinnaduraiயிடம் ஸ்பெஷலாக கையெழுத்திட்டு வாங்கிய இந்தப் புத்தகம் கை சேரும் முன்பே sapiens படிக்கத் தொடங்கி இருந்ததால், parallel readingஇல் 'கன்னித்தீவு' தொடங்கி, ஓர் அத்தியாயம் படித்து முடித்தேன். கிண்டிலில் sapiens கிட்டதட்ட 30% முடித்திருந்த வேளையில், இதைவிட கன்னித்தீவு முதல் அத்தியாயம் கொஞ்சம் அதிக சுவாரஸ்யமாக இருந்ததே என தினமும் மனசு சொல்லிக்கொண்டே இருந்தது. இடையில் போட்டி அறிவிப்பு வந்தும் கூட தொடங்க ஒரு motivation வராமலே இருந்தது. ஆனால் அந்த முதல் அத்தியாயம் என்னை விட்ட பாடில்லை. ஒரு வழியாக, சரி parallel reading எல்லாம் வேண்டாம், முதலில் கன்னித்தீவை முடிப்போம் எனப் படிக்கத் தொடங்கினேன்.

ஒரு காதல் மணம் புரிந்த பெண் ஒருத்தி, பழங்குடிகள் இடத்தில் மாட்டிக்கொண்ட பின் நடக்கும் கதை. மானுடவியல் பார்வையில் நிறைய விஷயங்கள் கலந்து செய்த கலவையான கதை.

கர்ப்பகால பரிசோதனை எனத் தொடங்கி அதைத் தொடர்ந்து ஒரு ஃப்ளாஷ்பேக். நாயகி நாயகன் திருமணம். ஏற்கெனவே இவ்வாறொரு திருமணத்தை நேரில் கண்ட அனுபவம் உண்டு என்பதால், நிறைய விஷயங்கள் பொருத்திப் பார்க்க முடிந்தது. பல விஷயங்கள் நிஜத்தில் நடந்தவையோடு அட்சர சுத்தமாக பொருந்தின.

அவனிடம் பழகும் பெண்கள் அவனைக் காதலிக்காமல் இருக்க முடியாது என்பது கொஞ்சம் மிகையாகவே இருந்தது. கவிதைக்கு அழகே மிகைப்படுத்தல்தானே! பையன் கேரக்டர் ஒரு வகையில் இங்கு கவிதை போலத்தான் இருந்தது. அதனால் ஓக்கே.

அதே போல, அந்தப் பெண்ணுக்கு அத்தனை தைரியமா? ஆனால் கொஞ்சம் கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டு காலை ஒடித்துக் கொண்டவரின் கதை எனக்கு நெருங்கிய வட்டத்திலேயே உண்டு என்பதால் அதைக் கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனாலும், கர்ப்ப காலம், கப்பல் பயணம், பழங்குடி இடம் என எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் படிக்கும் நமக்கே 'பக்'கென்று இருக்கும்.

நாயகி பார்வதி கடல் வழியே அந்தப் பழங்குடி இடத்திற்கு செல்லும்போது,

"கடலின் உயிர்ப்பே இதில் தென்படவில்லை. அலைகள் இல்லாமல் என்ன கடல்!" என சலித்துக்கொள்கிறாள்.

கூட வரும் ரஸூல்,

"நடுக்கடலில் இது நமக்குக் காட்டுவது தனது உயிர்ப்பை. குறும்புத்தனத்தை அல்ல; தன் பிரமாண்டத்தை, பெரும்பலத்தை. இது வேறு முகம்" என்று கூறுகிறார்.

அத்தனை ஆத்மார்த்தமாக இந்த வரிகளுடன் மனம் ஒன்றிப்போனது. நடுக்கடலை பார்க்கும் ஆசை உண்டென்றாலும் இன்னும் பார்க்க வாய்க்கவில்லை. ஒருவேளை கடலை பார்த்திருந்தால் இப்படித்தான் மனவோட்டம் இருந்திருக்கும் போலிருக்கிறது.

பின்பொரு முறை பார்வதி நினைக்கிறாள்,

"ஒரு நகைச்சுவை கூட யார் சொல்கிறார் என்பதில்தான் வருவது புன்னகையா, எரிச்சலா என தீர்மானிக்கிறது."

இது எவ்வளவு நிஜமான வார்த்தைகள். சில சமயத்தில் இது பற்றிய குற்றவுணர்வு மனதில் உழலும். ஆனால், இதைப் படிக்கும்போது நிஜமாகவே ஒரு தெளிவு ஏற்பட்டது. நகைச்சுவை நம்பிக்கையான ஒருவர் சொல்லும் போதும், முன்பின் அறிமுகமில்லாதவர் அதைச் சொல்லும் போதும், நாம் நம்பாத ஒருவர் அதை சொல்லும்போதும் வேறு வேறு உணர்வு ஏற்படுவது சகஜம் தானே. நமது protective intuition அவ்வாறு நடந்துகொள்ளச் செய்வதில் என்ன தவறு இருக்கிறது. எடுத்தவுடன் உரிமை எடுத்துக்கொள்பவன் மீது நம்பிக்கை எப்படித் துளிர்க்கும்? இந்த விஷயத்தில் இந்தப் புத்தகம் எனக்கு ஒரு eye opener.

அவனுக்கு அப்படி ஒரு முடிவு ஏற்பட்டது, ஒரு வகையில் மனதின் வன்மத்திற்கு தீனி போடுவதாகவே இருந்தது. மற்றபடி, நிக்கியை போன்ற அபத்தங்கள் உலகெங்கும் தென்படக்கூடிய ஜந்துக்களே.

அடுத்தாக, அந்தப் பழங்குடிகளிடம் பார்வதி பழகுவது. முதல் ஆபத்தில் குழந்தை மூலமாகத் தப்பித்த பின், மொழி தெரியாத இடத்தில் எப்படியெல்லாம் உழல்வோம், கவனிக்கப்படாத இடத்தில் எந்த அளவுக்கு தவறு என்று எண்ணப்படும் விஷயங்களைச் செய்ய மனம் ஒப்புக்கொள்ளும், எங்கு எதிர்க்கும், மனதின் விசித்திரங்கள் எல்லாம் கோக்கப்பட்டது அருமை.

"எந்த இயற்கை சங்கதியும் மனிதர்களை அஞ்சுகிறது. அவனது வரலாறு அப்படி!"

இந்த வரிகள் ஆரம்பத்தில் படித்த sapiens புத்தகத்தை நினைவுக்கு இழுத்துவிட்டது. எப்படிப் பார்த்தாலும் ஆமாம் தானே! அப்படியான மோசமான நிலைமையை உண்டாக்குபவர்கள் தான் நாம். சுனாமிக்குத் தப்பிக்க ஒரு பெரிய மரத்தை நோக்கி பழங்குடிகளுடன் ஓடும் பார்வதி, மரத்தைப் பார்த்தவுடன், "இதை வெட்டி வீழ்த்தினால் ஒரு ஜமீன் பங்களாவுக்கு தேவையானதை அருளும்" என்று நினைக்கிறாள், பின்பு எல்லாமே தீப்பற்றி எரிந்து போவதை கற்பனை செய்து பார்க்கிறாள்.

நிஜத்தில் இப்படியான அபத்த கற்பனை நிறைந்தவர்கள் தானே நாம்? இங்கே யாருமே இல்லை என்று சொல்லி விட முடியாத அளவு, பற்பல தருணங்களில், பல விதமான வித்தியாசமான, அபத்தமான, நினைக்க விரும்பா சிந்தனைகளுடன் உலவுபவர்கள் தானே நாம். ஆனால், எத்தனை சீக்கிரம் வெளியே வந்து நிஜத்துடன் ஒன்றிக் கொள்கிறோமோ, அத்தனை தூரம் பைத்தியமாவதிலிருந்து தப்பித்துக் கொள்கிறோம்.

நிக்கியின் தவறான பார்வை குறித்து ரசூல் நிக்கியிடம் எதுவுமே கேட்காமல் இருப்பது மோசமாகத் தோன்றினாலும், இங்கு நிஜம் அது தான். கோழையாக அல்லது நமக்கு என்ன என்று நகர்ந்து போவதே பெரும்பாலனவர்கள் செய்யக்கூடியது. அவள் படகில் தூங்கும்போது துப்பட்டாவை கொண்டு மூடியது போல், தங்கள் வட்டத்திற்கு பிரச்னை வராதவாறே உதவிகள் செய்வார்கள். மிகச்சில தருணங்களில் தட்டிக்கேட்டவர்களின் முகமும், நீ தூரமா இருந்துக்கோ, அவன் மூஞ்சிலயே முழிக்காத போன்ற அறிவுரைகளும் கண்முன் வந்து சென்றன. :)

இந்த கதையில் பல விஷயங்கள் கதையாகத் தோன்றாமல், நிஜம் போலவே தோன்றக் காரணம் அந்த இடங்களைப் பற்றிய அறிவும், அம்மாதிரியான மனிதராக இருப்பதோ அல்லது அம்மாதிரியான மனிதர்களோடு பழகியிருப்பதோ தான் காரணம் என்று கூறுமளவிற்கு நம்பகத்தன்மை ஏற்படுத்தக்கூடியது.

மரியா. என்னதான் யாருக்கு யார் வேண்டுமானாலும் சொந்தம் என்ற சமூகத்தில் பிறந்தாலும், எல்லோராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதாவது, பெரும்பாலானோர் இங்கு தாலி கட்டி பெண்ணை சொந்தமாக்கிக் கொள்வதை ஆதரித்தாலும். Open relationship, dating ஆகியவற்றை ஆதரிப்போரும் இருக்கிறோம் அல்லவா? Spur of the momentல் செய்ததாய் தோன்றிய கொலை. ஒரே வேளை சின்ன இடைவெளி கிடைத்திருந்தாலும் கையில் காலில் விழுந்து மன்னிப்பு பெற்றிருக்கக்கூடும்.

கதை முடிவு, பார்வதியும் குழந்தையும் காய்ச்சலுக்கு தப்பியதும், மரியாவும் அவள் குழந்தையும் இறந்ததும் அறிவியலின் வளர்ச்சியை சொல்லும் விதமாக இருந்தது அருமை.

கதாபாத்திரங்கள் மூலம் நிறைய விஷயங்கள் கூறியிருக்கிறார். கலப்புத் திருமணம், பார்ப்பனியம், அரசியல், உணவு, மருத்துவம் எனப் பல்வேறு விஷயங்கள். தகவல்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும், எதுவும் துருத்திக்கொண்டிருப்பதாய் தோன்றவில்லை.

ஒரு வகை easy learning. தகவல்களைப் பொருத்தவரை நிறைய தேடியிருப்பதற்கான உழைப்பு நன்றாகத் தெரியும்.

மற்றபடி, நிஜமாகவே ஒரு படம் பார்த்த உணர்வு இருக்கும். ப்ரேக் எதுவும் விடாமல், 'ஒரே மூச்சில்' படித்து முடித்து விடக்கூடும்.

புத்தகம் முழுக்க அவ்வளவு காதல். ஒருவர் அவ்வளவு காதல் வயப்பட்ட பின், அந்தக் காதலைப் பற்றி நொடிக்கொரு முறை நினைக்கவே தோன்றும். அப்படி அவள் ஓராயிரம் முறை முருகனை நினைக்கிறாள். எல்லா இடங்களிலும் அவனைப் பற்றிய நினைவைக் கொண்டோ அல்லது அவனைப் போல யோசித்தோ, அவன் இடத்தை நிரப்பியே வைத்திருக்கிறாள். காதல் ❤️

கதையோடு இயல்பாக இல்லாமல் எனக்குத் தோன்றிய விஷயங்கள்,

1. பார்வதிக்கு அவ்வளவு பக்கத்தில் due date இருந்தும் அவ்வளவு தூரத்தில் அரசு சம்மந்தமான வேலைக்கு அனுப்பப்பட்டது
2. எல்லாப் பிரச்னைகளிலும் அவள் மட்டும் தப்பித்தது. (ஆனால் அது இல்லையென்றால் கதையே இல்லை இல்லயா?)
3. பார்வதி திரும்பிய காட்சி. தொங்கி சாகசம் செய்து ஹெலிகாப்டரில் ஏறியது.

மொத்தத்தில் நல்ல நாவல். Worth the time. நிச்சயம் படிக்கலாம்.

Saturday, 7 March 2020

கொஞ்சம் பொய், கொஞ்சும் காதல் - 5


ட்விஸ்ட்டான காதல் சொல்லல் என்னன்னா, வீட்டுல சொல்ற வரைக்குமே நாங்க லவ் பண்றோம்னு ஒருத்தருக்கு ஒருத்தரே சொல்லிக்கல.. தில்லானா மோகனாப்பாள் ட்ரெயின் சீன்ல கூட கண்ணால தான் பேசுனாங்க. நாங்க போன ஆன்ல வச்சுக்கிட்டு மனசாலயே பேசுனவங்க..

இப்போவும் அப்பப்போ நலந்தானா நலந்தானானு கண்ணால பேசிக்குறோம்.. கிகி.. 

இரண்டு பேருக்கும் பிடிச்சிருக்குனு கன்பார்மா தோணின உடனே, எங்காளு வீட்ல சொல்ல ரெடி ஆயிடாப்ல.. அடுத்ததா வந்தது தீபாவளி லீவு..

நானோ வீட்ல இப்ப சொல்லலாமா வேண்டாமா? எப்ப சொல்லாம்ங்கற குழப்பத்துல..

லவ் யூங்கற வார்த்தையவே சொல்லலயே, வீட்ல என்னத்த சொல்றது? சரி, சொன்னா அவங்ககிட்ட என்ன மாதிரியான ரியாக்சன்ஸ் இருக்கும்னு பேசிக்க ஆரம்பிச்சுட்டோம்.

நிறைய குழப்பங்கள்.. சரி எதுவா இருந்தாலும் சேர்ந்தே பாத்துப்போம்னு ஒரு மனசு. மனோவ பத்தி அதிகம் தெரியாதேனு சைட்ல ஒரு குறுகுறுப்பு வேற..

அப்போ வந்த தீபாவளியில, சொன்னோமா இல்லியா?

*தொடரும்*

கொஞ்சம் பொய், கொஞ்சும் காதல் - 6


தீபாவளியில மனோ மட்டும் அவங்க வீட்ல சொல்லிட்டாங்க. அவங்க வீட்ல சரினு சொன்ன அப்பறம் நாம சொல்லிக்கலாம்னு நான் அமைதியா இருந்துட்டேன்.

சரி பாத்துக்கலாம் ஒரு வருஷம் பொறுங்கனு சொன்னதால, நாங்களும் அதுக்கப்புறம் அந்த டென்ஷன விட்டுட்டு ஜாலியா இருந்தோம்.

கிட்டதட்ட சரினு சொன்ன மாதிரி பேசுன உடனே, நானும் எங்க வீட்ல சொல்லிட்டேன். எப்பவும் பெரிசா மூட நம்பிக்கைகள், ஹிட்லராச்சினு எல்லாம் எதுவுமில்லாம, மனுசன் மனசுக்கு மட்டும் மதிப்பு குடுத்து முடிவெடுக்கறவங்க அப்படிங்கறதால டக்குனு சமாதான படுத்தியாச்சு. குட்டைய குழப்பற சொந்தக்காரனயும் வேற அண்ட விடமாட்டாங்க. ஆனாலும் எங்க அப்பாவுக்கு சின்ன குழப்பம். 

இப்போ தான் ஜோசியக்காரங்க என்ட்ரி. இந்த 2 ஜாதகத்துக்கும் பொருத்தம் இல்ல, 1 வாரம்கூட சேர்ந்திருக்க மாட்டாங்க. 3 மாசமெல்லாம் கன்பார்ம் பிரிஞ்சிருவாங்க. சண்டையான சண்ட போடுவாங்கனு பீதிய கெளப்பிட்டாங்க. கூட இருக்கறது எல்லாருக்கும் ஏற்கனவே இப்படி லவ் பண்ணி பிரிஞ்சவங்க ஸ்டோரி எல்லாம் நியாபகம் வரத் தொடங்குனுச்சு. இப்ப அவங்க அப்பாவுக்கும் அதே சின்ன குழப்பம். எங்களுக்கு அதுல நம்பிக்கை இல்லாததால அந்த விஷயங்கள் பாதிக்கல. ஆனா எல்லாருக்கும் அப்படி இருக்காதில்லயா?

குழப்பங்கள் என்ன செஞ்சது?

*தொடரும்*

கொஞ்சம் பொய், கொஞ்சும் காதல் - 7


இப்ப தொடங்குனது நிஜமான ஆட்டம். எல்லாருக்கும் குழப்பம் வந்துட்டா சும்மா இருப்பாங்களா? நம்மளையும் சேர்த்து குழப்பறது தானே, நம்மாட்களோட தனி சிறப்பே! 

பெற்றவர்களைத் தவிர ஆளாளுக்கு அட்வைஸ்கள், கருத்துகள்னு காது கரிதுணி கிடைச்சா கூட அடைச்சுகற அளவுக்கு ஆக்கி விட்டாங்க.

ஏன்னா, அவங்களுக்கு மனோ புதுசு, எதுவும் தெரியாது. ஆனா பழகின எனக்கு கொஞ்சமாவது தெரியுமில்லையா? அதுவும் மனோ ஒவ்வொரு விஷயத்துக்கும் காட்ற பொறுமையும், யோசிச்சு செய்யற நிதானப்போக்கும் இன்னும் நம்பிக்கைய தான் கூட்டுனுச்சு.

நேர்லயே அதிகம் சந்திக்காத, பெரும்பாலும் பேஸ்புக்ல மட்டுமே தெரிஞ்சுகிட்ட எனக்கு எப்படி அப்படிபட்ட நம்பிக்கை வந்தது?

இவங்க போஸ்ட், கமென்ட்னு முதல்ல ஒரு கலகலப்பு இருந்தாலும், மொதல்ல உள்ளூர ஒரு பயம் இருக்கத்தான் செஞ்சது. பெண்கள்ன்னு எங்கயாவது போட்டுட்டாலே, களமாடறாப்லயே, அவ்வளவு பெரிய ஆணாதிக்கவாதியானு 😂

ஆனா பழக பழக, நிஜமான இந்த ஆள் சுட்டெடுத்த பெண்ணியவாதி டோய்னு புரிஞ்சு போச்சு. எங்க வீட்ட பொறுத்த வரையில யாரும் யாரோட சுதந்திரத்துலயும் தலையிட மாட்டாங்க. தேவைப்படும் போது suggestions மட்டுமே கிடைக்கும். 

அதுனால என்னோட சுதந்திரம்னு நான் நினைக்கற விஷயங்கள்ல யாராவது இம்மியளவு தலைய  நீட்டுனாலும் அவங்கள என்னோட மனசுல இருந்து விரட்டிருவேன். (மனசுல இருந்தா தானே இவங்க இப்படி சொல்லிட்டாங்களேனு வருத்தம் வரும்). 

இன்னிக்கு வரைக்கும் மனோ அப்படி ஒரு சுதந்திர அத்துமீறல செஞ்சதே இல்ல. எனக்கு பிடிச்ச விஷயங்கள செய்றேன். பிடிச்ச மாதிரி இருக்கேன்.

இன்னும் சொல்லனும்னா, தாலி போடறது, குங்கும்ம் வைக்கறதுனு சமுதாயம் கட்டாயப்படுத்தும் விஷயங்கள் கூட, என் சார்ந்த விஷயமா இருக்கறதால, போடலாமா வேணாமா, எங்க போடலாம் வேணாம்னு முடிவு பண்ற சுதந்திரம் என்கிட்டயே தான் இருக்கு. 

இப்படி இதுக்கு முன்னாடியும் என் சம்மந்தப்பட்ட விஷயங்களின் முடிவு என்கிட்டயேவும், இருவர் சம்மந்தப்பட்ட விஷயங்கள் ஆலோசித்தும் தான் எடுக்கறோம்னா, அது கண்டிப்பா என் அம்மா வீட்ட தக்க வச்சுக்கற மாதிரியே தான? இந்த மனுஷன எப்படி நம்பாம இருக்க முடியும்?

அடுத்த நடந்தத அடுத்ததுல சொல்றேன் :) 

*தொடரும்*

கொஞ்சம் பொய், கொஞ்சும் காதல் - 4


என்ன தான் காதல பேசிக்கலனாலும், பொத்தி வச்ச புகை மாதிரி ரிலீஸ் ஆகத்தானே செய்யும். அப்படி கொஞ்சம் கொஞ்சம் வெளிப்படையாவே பேசிக்க ஆரம்பிச்சோம்.

பொதுவான விஷயங்கள், விருப்பங்கள், சேர்ந்திருந்தா எப்படி இருக்கும், இன்னும் நிறைய.. எல்லாரும் இதையே தான் பேசுவாங்கன்னாலும், நாம பேசும் போது புதுசா தானே இருக்கும்.

கலாய்ச்சுகிட்டே பேசிகிட்டு இருந்தோம். இன்னிக்கு வரைக்கும் என்ன சண்டைன்னாலும் இடை இடையில கலாய்க்காம இருக்கறதில்ல.. கடுப்பா கலாய்க்கறது ஒரு பழக்கமாவே கூட ஆச்சு போல..

என்ன தான் பவ்யம்ன்னாலும், நல்லா பேச ஆரம்பிச்ச அப்புறம் நமக்குள்ள இருக்க வித்தியாசங்கள் தெரிய வருமில்லையா.. ஆனா இரண்டு பேருமே அதுக்கு முட்டு குடுக்காம, நான் இப்படிதான்னு சொல்ற ஆளுங்க.

அது ஏற்கனவே எனக்கு புரிஞ்சிருந்தது. பெரிய சண்டைகள, கோபங்களை எதிர்பார்த்திருந்த எனக்கு, பெரிய சர்ப்ரைஸ். எதையுமே பெரிசா அலட்டிக்காம, அப்படி தான்னு நிறைய விஷயங்கள நாங்க கடந்து போக ஆரம்பிச்சிருந்தோம். கொஞ்ச நாள் கழிச்சு கவனிக்கும்போது ரொம்ப ஆச்சரியமா இருந்தது. அதுக்கு முக்கியமான ஒரு விஷயம்னா, மனோவோட ஏத்துக்கற மனசு தான். தப்ப சரியா சுட்டி காட்டுனா, சினிமா மாதிரி டக்குனு மாறிடுவாப்ல..

சரி இது காதல் தான்னு முடிவாச்சு.. ஆனா யாராவது ஒருத்தர் வாயத்திறந்து விஷயத்து போட்டு உடைக்கனும்ல.. அங்க தான் இருந்தது பெரிய ட்விஸ்ட்டு!

Sunday, 29 December 2019

காதல் எல்லாத்தையும் மாத்தும்!

ஒரு 2 வருஷத்துக்கு முன்னாடி, சாப்பிடற அளவுக்கு நான் சமைப்பேன்னு சொன்னாலே சிரிச்சிருப்பேன். போன வருஷம் 3 வாரத்துக்கு டைம்டேபிள் போட்டு சமைச்சு பாத்தேன். சமையல் ஒண்ணும் அவ்வளவு கஷ்டமா இல்லயேன்னு தோணுனதால, அப்படியே விட்டாச்சு.. கல்யாணம் முடிஞ்சும் கிட்டதட்ட 2 1/2 வாரம் நான் சமைக்கல.. மாமியார் வீடு, அம்மா வீடு, அப்பறம் அவங்க இங்க வந்ததுன்னு நல்லா ஓபி அடிச்சாச்சு.. அதுக்கு அடுத்த வாரத்துல இருந்து பழையபடி டைம்டேபிள் போட்டோம்.

எல்லா விஷயத்துக்கும் உந்துதல் ஒண்ணு இருக்கனும். அது காதலாவோ, காதலிச்சவங்களோட சந்தோஷமாவோ, யாருடைய பாராட்டாவோ அல்லது வேற ஏதாவதாவோ இருக்கலாம்.

சமைக்கும்போது, முடிந்த வரை முதல் முறையே நல்லா செஞ்சுடனும்னு முயற்சி பண்ணுவேன். மனோக்கு பிடிக்கனும். அவ்ளோ தான்.

இங்க அவங்க பேசறத பாத்தா கடஞ்செடுத்த ஆணாதிக்கவாதி மாதிரி தெரியும். ஆனா அது போல பெண்ணியவாதி எவனுமே கிடையாது. ஏதோ ஒண்ணுனா ஹெல்ப் பண்றது தொடங்கி, எனக்கு பிடிச்சத செய்யறத motivate பண்றது, ஏதோ ஒரு சமயம் first time செய்யற டிஷ் சுமாரா வந்துட்டாலும் ஒதுக்காம சாப்பிடறதுன்னு. உண்மைய சொல்லனும்னா perfectஆ வரலானா நானே அத தொட மாட்டேன். அதனால தான், எப்போ புது டிஷ் சமைச்சாலும், அது கூடவே ஒரு பிடிச்ச ஏதாவதும் டைம்டேபிள்ல இருக்கும். But he is awesome. இதுவரை எதையுமே வேண்டான்னு சொன்னதில்ல..

அடிக்கடி நான் சொல்லுவேன், இதே வேற யாரையாவது கல்யாணம் பண்ணிருந்தா, ஆரம்ப காலத்துல சமைச்ச மாதிரி, அதே கேவலமான ரசத்த தான் ஊத்திருப்பேன்னு. மனோவும் அதே மாதிரி வேற யாரையாவது கட்டிருந்தா இவ்ளோ supportiveஆ நான் நடந்திருப்பனான்னு தெரியாதுன்னு சொல்லிருக்காங்க. ஏனோ, அத கேக்கும் போது ரொம்ப ஸ்பெஷலா தோணும்..

Mood swings, உளறல், கோவம், காதல், அழுகைனு எல்லாத்தையும் புரிஞ்சுக்க தெரிஞ்ச மனுஷன் ❤ கல்யாணமே பண்ண முடியாதுன்னு சொன்னவங்களுக்கு கல்யாணம் பண்ணி காட்டியாச்சு. 1 மாசம் கூட சேர்ந்திருக்க மாட்டங்கன்னு சொன்னவங்களுக்கு, 1 மாசத்த தாண்டியாச்சு.. அவங்களுக்கு இன்னும் பல வருஷங்கள் இதவிட அதிக அன்போட இருந்து காட்டுவோம். கொஞ்ச நாள் தான் இப்படி சமைக்க முடியும், 90 நாள் முடிஞ்சாலோ, குழந்த பிறந்தாலோ, இதெல்லாம் செய்ய முடியாதுன்னு சொல்றவங்களுக்கு அப்பறமா அத எப்படி மேனேஜ் பண்ணோம்னு சொல்ல ஆசபடறேன்.

இதெல்லாம் இதே அளவு செய்ய முடியுமான்னு எனக்கு தெரியாது. ஆனா சோர்வா இருக்கு, சலிப்பா இருக்குனு சொல்லி என்னைக்குமே நான் முயற்சி பண்றத நிறுத்த மாட்டேன்.

என் புருசன் ராஜா மாதிரி தான் சாப்பிடுவான் மகாராஜா மாதிரி தான் வாழுவான். Because he is அத்து and my best man ❤

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb...