மனிதர்களற்ற இடங்களில் வாசம் செய்வது என் விருப்பம்...
இந்த கசகசப்புகளில், கட்டுப்பாடுகளில், நம்பிக்கைகளில் இருந்து தப்பித்து,
ஆளற்ற, அரவமற்ற தனிக்காடுகளில் திரிவது என் விருப்பம்.
சின்ன சின்ன பூச்சிகளின் க்ரீச் சத்தங்களும்,
உயர உயர பறக்க விரும்பும் பறவைகளின் பாடல்களும் என் விருப்பம்.
அலையோடு விளையாடி, கால் தொட எத்தனிக்கும் நீரிடமிருந்து தப்பி விளையாடும் சிறிய விளையாட்டுகள் என் விருப்பம்.
தனிமையில் காற்றின் சத்தமும், பதில் பேசும் இலைகளின் சரசரப்பும், என் விருப்பம்.
மனிதர்கள் பிடிக்காதா? பிடிக்கும்..
ஆனால் மனிதர்களற்ற இடம் ரொம்ப பிடிக்கும்..
கட்டுப்பாடுகளற்ற இடம் மிகவும் பிடிக்கும்...
காற்றில் பரவும் வாசம் போல இயல்பாய் வாழ ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
❤
- சௌம்யா

 
 
No comments:
Post a Comment