Sunday 30 June 2019

பாவத்தின் பார்வை


பாவமென்று அறிந்த பின்னும் சலனமற்று நின்றிருந்தாள்..
அத்தை, மாமன், சித்தி என உற்றாரின் ஏச்சுகளை எல்லாம் கேட்டுக்கொண்டே அமர்ந்திருந்தாள்..
அப்பன் அவளை அடிக்கக்கூட செய்தான்..
அழுத்தமாய் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் தாய்..
ஏச்சுக்களை எல்லாம் கனவிலே தொலைத்துக் கொண்டிருந்தாள்..
அப்பன் அடித்தானே, வலியே இல்லை என்று எண்ணிக்கொண்டே தன்னை தொட்டு பார்த்துக்கொண்டாள்..
ஏனோ அந்த வெறித்த பார்வை மட்டும் இரவெல்லம் அவளை தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்தது..

#காதல்காரி 

No comments:

Post a Comment

மொழி அறிவோம் - 14

Simple Present - 2 பொதுவாக ஒரு Simple Present tense வாக்கியம் எப்படி இருக்கும்னு போன பதிவுல பார்த்தோம். Simple Present tenseல 'be verb&#...